Monday, April 28, 2008

அன்பின் பிரிவு


கானல் வாழ்க்கையே காணும் கண்கள்
கன்னம் நனைக்கும் கண்ணீர்

இயங்க மறுக்கும் இதயம்
பேச இயலாத தருணங்கள்
மொழி கேட்க ஆவலாய் செவி
நடக்க தத்தளிக்கும் கால்கள்

கை நீட்டி அழைத்தும்
நெருங்கிட இயலா தூரம்....

Thursday, April 24, 2008

என்னவன்


நினைவுகளில் இருந்து
பிரிக்க தவிக்கிறேன், உன்னை....
நினைவே நீ என்று தெரியாமல்...

Tuesday, March 11, 2008

திருமணம்



காலங்கள் கடந்து 

செல்ல செல்ல
எதிர்காலத்தை நினைத்து 

காத்திருக்க காத்திருக்க...
கை பிடிக்கிறேன் அவனை...
மறக்கிறேன் என்னவனை...
யாரும் அறியாமல் ...
நானும் அறியாமல் ...



"மறக்கிறேன் என்னவனை..." - எதோ காதலன் என்று நினைத்திட வேண்டாம்... என் கற்பனைகள், எதிர்கால கனவுகள் என்று என்னுள்ளானவனை மறக்கிறேன். யாருக்கு தெரியும் கை பிடிப்பவன் எப்படி பட்ட மனசு கொண்டவன் என்று. நம் கனவுகளை அவனுடையாக ஏற்று அது நடக்க வழி கொடுப்பவனோ அல்லது அதற்கு மாறாக இருப்பவனோ...