தொலைவு
இருமணம் இணைய காத்திருந்த பொழுதுகள்
இப்பொழுது என்னை கேள்வி கேட்கின்றன!
எங்கே இருந்தது இந்த மனதென்று !!!
மனதொத்தவனாய் இருப்பாய் என நினைத்தேன்
இப்பொழுது தானே தெரிகிறது!
ஒத்துப்போகும் மனது இல்லாதவனென்று !!!
நீ வாங்கி கொடுத்த சிரிக்கும்
பொம்மைகள் கூட அழுகின்றன !
இன்று என் நிலையை பார்த்து !!!
நீ வாரி அணைக்கின்ற பொழுதில்
நினைக்கின்றது - என் மனம்
நீ தூக்கி எறிந்த ஒரு தருணத்தை !!!
விரல் படும் இடைவெளியில்
அண்டமும் புலப்படுகிறது
தொலைவு மனதில் என்று !!!
இருமணம் இணைய காத்திருந்த பொழுதுகள்
இப்பொழுது என்னை கேள்வி கேட்கின்றன!
எங்கே இருந்தது இந்த மனதென்று !!!
மனதொத்தவனாய் இருப்பாய் என நினைத்தேன்
இப்பொழுது தானே தெரிகிறது!
ஒத்துப்போகும் மனது இல்லாதவனென்று !!!
நீ வாங்கி கொடுத்த சிரிக்கும்
பொம்மைகள் கூட அழுகின்றன !
இன்று என் நிலையை பார்த்து !!!
நீ வாரி அணைக்கின்ற பொழுதில்
நினைக்கின்றது - என் மனம்
நீ தூக்கி எறிந்த ஒரு தருணத்தை !!!
விரல் படும் இடைவெளியில்
அண்டமும் புலப்படுகிறது
தொலைவு மனதில் என்று !!!
No comments:
Post a Comment