Saturday, August 16, 2008

இழந்து வந்தவள்

கட்டுக்குள் வைக்க 
நினைக்கிறாய் என்னை !!
நீ அறியாதவன் - நான்
கட்டுக்கள் அற்றவள் என்று!
அத்தனையும் இழந்தவள் - நான்
உனக்காக!உன்னையும் இழப்பேன் - என்
மன நிம்மதிக்காக !!!தாயாய்...
தந்தையாய்...
சகோதிரனாய்...
உற்ற நண்பனாய்...
இருப்பாயென்று என்
வலக்கால் பதித்தேன் - உன்னிடத்தில் !
ஒரு மனிதனாய் கூட நீ இல்லாமல் போனாயே !!!



No comments: